துவாஸ் தொழிற்சாலை ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து இருவர் தீக்காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் 28, துவாஸ் அவென்யூ 10ல் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் இணையப் பக்கத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் செய்தி வெளியிடப்படது. நான்கு நீர் பீய்ச்சியடிக்கும் கருவிகள், ஒரு ஆளில்லா தீயணைப்பு இயந்திரம், வானிலிருந்து நீர் பாய்ச்சும் மேடை ஆகியவற்றுடன் தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடிக் கொண்டிருந்ததாக அந்த ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.
தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீப்பற்றிக் கொண்டது என்றும் ஆனால் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் உள்ளது என்றும் மாலை 6.24 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. தீக்காயங்களுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு இருவர் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர்கள் தொழிற்சாலை யில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் என்றும் அறியப் படுகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய படங்களில், பெரும் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதையும் சுற்றுவட்டாரத்தில் நிறைய கரும்புகை எழுவதையும் காண முடிந்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வீரர்கள். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை