தாமான் ஜூரோங் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சென்று கொண்டிருந்த கார் லாரியுடன் மோதியது. அதனைத் தொடர்ந்து நடைபாதை மீது ஏறிய கார் மரத்தின் மீது மோதியது. இறுதியில் அருகில் இருந்த பள்ளத்தில் அது விழுந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவரும் காய மடைந்தனர். காரில் இருந்தவர் களைக் காப்பாற்ற அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வழிப்போக்கர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.- கார் ஓட்டுநரான 25 வயது குமாரி சாங் ஹுயிபிங், அவரது 22 வயது தங்கை, அவரது 57 வயது தந்தையார் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குமாரி சாங்கின் தந்தைக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் விபத்துக் குள்ளான காரில் ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரி சாங்கின் நெற்றியில் 14 தையல்கள் போடப்பட்டன. அவரது முகத்திலும் பல வெட்டுக் காயங்கள் இருந்ததாக அறியப்படு கிறது. அவரது தங்கை வீடு திரும்பியுள்ளார்.
விபத்தில் நொறுங்கி பள்ளத்தில் விழுந்த கார். படம்: ஷின்மின்