சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

தாமான் ஜூரோங் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சென்று கொண்டிருந்த கார் லாரியுடன் மோதியது. அதனைத் தொடர்ந்து நடைபாதை மீது ஏறிய கார் மரத்தின் மீது மோதியது. இறுதியில் அருகில் இருந்த பள்ளத்தில் அது விழுந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவரும் காய மடைந்தனர். காரில் இருந்தவர் களைக் காப்பாற்ற அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வழிப்போக்கர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.- கார் ஓட்டுநரான 25 வயது குமாரி சாங் ஹுயிபிங், அவரது 22 வயது தங்கை, அவரது 57 வயது தந்தையார் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குமாரி சாங்கின் தந்தைக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் விபத்துக் குள்ளான காரில் ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரி சாங்கின் நெற்றியில் 14 தையல்கள் போடப்பட்டன. அவரது முகத்திலும் பல வெட்டுக் காயங்கள் இருந்ததாக அறியப்படு கிறது. அவரது தங்கை வீடு திரும்பியுள்ளார்.

விபத்தில் நொறுங்கி பள்ளத்தில் விழுந்த கார். படம்: ‌ஷின்மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!