தலைமைச் சட்ட அதிகாரி நியமனம் முரண்பாடானது

அமரர் லீயின் வீடு குறித்த விவகாரங்களில் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், துணைத் தலைமைச் சட்ட அதி காரி ஹரிகுமார் நாயர் ஆகியோ ரின் நியமனங்கள் முரண்பாடா னது என்று பாட்டாளிக் கட்சியின் தலைவி செல்வி சில்வியா லிம் கூறியுள்ளார். பிரதமர் லீ சியன் கூங் அர சாங்க அமைப்புகளைத் தங்க ளுக்கு எதிராகப் பயன்படுத்தி யுள்ளார் என்று பிரதமரின் உடன் பிறப்புகள் திரு லீ சியன் யாங்கும் டாக்டர் லீ வெய் லிங்கும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித் துச் சில்வியா லிம் கருத்து ரைத்தார்.

திரு லூசியன் வோங் பிரதமர் லீயின் தனிப்பட்ட வழக்கறிஞரா கப் பணிபுரிந்ததால்தான் அவருக் குத் தலைமைச் சட்ட அதிகாரி பதவி கிடைத்தது எனும் கருத் துகளையும் பிரதமரின் உடன் பிறப்புகள் வெளிப்படுத்தியுள் ளனர். திரு வோங், திரு ஹரிகுமார் ஆகியோரின் நியமனங்கள் குறித்து இதற்கு முன்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். திரு வோங், சட்ட அமைச்சர் கே சண்முகம் பணி புரிந்த அதே நிறுவனத்தில் பணியாற்றினார் என்றும் லீயின் வீடு குறித்துத் தனிப்பட்ட முறையில் பிரதமருக் குப் பல முறை ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் செல்வி சில்வியா கூறினார். இந்த விவகாரத்திலிருந்து திரு வோங்கும் குறிப்பாக முன் னாள் நாடளுமன்ற உறுப்பினரான திரு நாயரும் ஒதுங்கியிருப்பார் களா என்றும் செல்வி சில்வியா கேள்வி எழுப்பினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!