பயங்கரவாதிகள் என்றால் குறிப் பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பர் என்ற எண்ணமும் அணுகுமுறையும் தவறான ஒன்று என நேற்று நடைபெற்ற அனைத்துலக போலிஸ் மாநாடு, கண்காட்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரான திரு யானிவ் பேரேட்ஸ் தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகளின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்றும் பயங்கரவாதிகள் இப்படித்தான் இருப்பர் என்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் கருதுவதாக பாது காப்பு நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்கும் அமைப்பு ஒன்றின் திட்ட இயக்குநரான திரு பேரேட்ஸ் குறிப்பிட்டார். எனவே, பயங்கரவாதத்தை இன ரீதியாக அணுகுவது தவறு என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஒரு சுற்றுச்சூழலின் வழக்க நிலையை நன்கு அறிந்து வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் நிகழும்போது விழிப்படைந்து நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றார் அவர். சமுதாயத்தில் உள்ள அனைவரும் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை அடை யாளம் கண்டு விழிப்புடன் இருக்கவேண்டும் என்று திரு பேரேட்ஸ் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய அளவில் நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பிறகு தனிநபர்களால் நடத்தப்படும் தாக்குதல்களும் நிகழ்வதை பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இணையம் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு குறுகிய காலகட்டத்தில் தீவிரவாதப் போக்கைத் தழுவிக்கொள்பவர் களால் இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படு கிறது.