கேலாங் லோரோங் 16ல் சில நாட் களுக்கு முன் ஆடவர் ஒருவர் தன் மனைவியைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஜெயசீலன் என் சந்திரசேகர் என்ற அந்த 29 வயது ஆடவர், 10 செ.மீ. நீள கத்தியால் திருமதி மயூரி கிருஷ்ணகுமார், 26, என்ற தன் மனைவியை, அவரின் வயிற் றில் இரண்டு தடவையும் கீழ் முதுகில் இரண்டு தடவையும் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது அந்த இடத்தில் இருந்த ஒருவர் சம்பவத்தைக் காணொளிப் படம் பிடித்தார். அதை அவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
இந்தச் சம்பவம் டிசம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் 11.47 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பின் சிறிது நேரம் கழித்து பிற்பகல் சுமார் 12.15 மணிக்கு ஜெயசீலன் கைதானார். குற்றவாளி என்று தீர்ப்பானால் ஜெயசீலனுக்கு ஆயுள்தண்டனை அல்லது 15 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல் லது பிரம்படி விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஜெயசீலனின் மனநிலையை மதிப்பிடுவதற்காக அவர் மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவரின் வழக்கு அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்கு வரும். கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமதி மயூரி, அதனை யடுத்து டான் டோக் செங் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருந்ததாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன.
கேலாங் லோரோங் 16ல் தன் மனைவியைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் ஜெயசீலன் என் சந்திரசேகர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்