கடந்த ஆண்டு சாதாரண ('ஓ') நிலை தேர்வு எழுதிய மாணவர் களின் தேர்ச்சி விகிதம் 2016ஆம் ஆண்டு 'ஓ' நிலை தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்து டன் ஒப்பிடக்கூடிய விதத்தில் இருக்கிறது என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. 2017ல் மொத்தம் 29,112 பள்ளி மாணவர்கள் 'ஓ' நிலை தேர்வை எழுதினர். அவர்களில் 99.9 விழுக்காட்டினர் 'ஓ' நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அதாவது அவர்கள் குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்று 'ஓ' நிலை சான்றிதழ் பெற்றனர். எனினும் குறைந்தது மூன்று அல்லது ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட சற்றே சரிந்தது. குறைந்தது ஐந்து 'ஓ' நிலை பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 83.4 விழுக்காடு என சற்று சரிந்தது. அந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு 84.3 விழுக் காடாக இருந்தது. அதே போல கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 96.4 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி அடைந்தனர்.
சாதாரண நிலை தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் B3 மதிப்பெண் பெற்ற குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற ரோஸ்னாரா பேகம் ஜமால் முகமது, 16, பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'பிஎஃப்பி' எனப்படும் அடிப்படை பாடத் திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளார். படம்: திமத்தி டேவிட்