மின் ஸ்கூட்டரால் கடந்த வாரத் தில் நடந்த ஒரு விபத்தில் மாதுக்கு தலையில் அடிபட்டது. மற்றொரு சம்பவத்தில் மின் ஸ்கூட்டர் பேட்டரி எரிந்ததில் வீட்டில் தீ பற்றி, உள்ளே இருந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிடோக் வட்டாரத்தில் புதன் கிழமை அன்று மின் ஸ்கூட்டர் மோதியதால் தலையில் காயம் ஏற்பட்ட மாது ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். பிடோக் ரெசர்வாயர் ரோடு, புளோக் 151 அருகே புதன்கிழமை மாலை 6 மணி அளவில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அடிபட்ட 45 வயது மாது சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நினைவோடிருந்தார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.
அந்த மாது குமாரி கோ லே யோங் என்று சாவ் பாவ் சீன நாளிதழ் செய்தி தெரிவித்தது. வேலைக்குச் செல்லவும் திரும்பி வரவும் அங்கிருக்கும் மேம்பாலத்தை அவர் அன்றாடம் பயன்படுத்துவார். புதன்கிழமை அன்று மேம்பாலத்திலிருந்து அவர் கீழே இறங்கியபோது, மின் ஸ்கூட்டர் ஒன்று பின்புறத்தில் அவர் மீது மோதியது. உடனேயே மயக்கம் அடைத்து விட்ட தமக்கு, ஆம்புலன்ஸ் வண்டியில் நினைவு திரும்பியதாக சாவ் பாவ் நாளிதழிடம் கூறினார்.
மின் ஸ்கூட்டர் மோதியதால் தலையில் அடிபட்டு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்ற குமாரி கோ லே யொங். படம்: சாவ் பாவ்