செயற்கை நுண்ணறிவுடன் செயல் படும் இயந்திர மனிதர்களின் பயன்பாடு சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில எந் தெந்த செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதனால் செயற்கை நுண்ணறிவு சாதனங் களின் நெறிமுறைகளை வகுக்க புதிய ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும் ஓட்டுநர் இல்லா வாகனம் பாதையிலிருந்து விலகி பாதசாரிகள் மீது மோத நேர்ந்தால் என்ன செய்வது, சாலையில் ஓட்டுநரையும் பயணி களையும் பாதுகாக்கும் முயற்சியில் மற்றொரு வாகனத்துடன் மோது வதைத் தவிர்ப்பது எப்படி உட்பட பல்வேறு சூழ்நிலையில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மன்றம் நிர்ணயிக்க விரும்புகிறது.