நாய்க்குட்டிகளைக் கடத்தி வர முயன்ற ஆடவர் பிடிபட்டார்

சட்டவிரோதமாக 12 நாய்க் குட்டிகளைச் கடத்திக் கொண்டு வர முயன்ற 25 வயது சிங்கப்பூர் ஆடவர் பிடிபட்டார். இம்மாதம் 11ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் துவாஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வாகனச் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அங்கு வந்து சேர்ந்த சிங்கப்பூர் பதிவெண் கொண்ட காரை சோதித்தபோது ஏதோ வித்தியாசமாக இருந்ததை அவர்கள் உணர்ந்தனர். அவசர காலத்திற்கான மாற்று டயர் வைக்கப்படும் பகுதியில் 12 நாய்க்குட்டிகள் மயக்கநிலையில் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அடைத்து வைக்கப் பட்டிருந்ததால் அவற்றுள் மூன்று குட்டிகள் இறந்துவிட்டன.

உரிய ஆவணங்கள் இன்றி நாய்க்குட்டிகளைக் கொண்டு வந்த அந்த ஆடவருடன் நாய்க் குட்டிகளும் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணை யத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக விலங்குகளை இறக்குமதி செய் தால் $10,000 வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

காரின் பின்புறம் மாற்று டயர் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குக் கீழே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மூன்று நாய்க்குட்டிகள் இறந்துவிட்டன. படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!