காரின் இயந்திரமுள்ள முன்பகுதியின் மேல்மூடிக்கு அடியிலிருந்து பாம்பு வெளியே நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்ட இல்லத்தரசி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
வியாழக்கிழமை இரவு சுமார் 11.50 மணிக்கு பாசிர் ரிஸ்ஸில் இருந்து மெய் சின் ரோட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இல்லத்தரசி கெசேண்ட்ரா டான் தனது காரின் முன்பகுதியிலிருந்து ரப்பர் துண்டு போன்ற ஒரு பொருள் நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார்.
காரின் முன்கண்ணாடி துடைப்பானை இயக்கி அதனைத் தகர்க்க முயன்றார். ஆனால் அந்தப் பொருள் தொடர்ந்து அங்கு இருந்ததைக் கண்ட திருவாட்டி டான் அதனை உற்றுக் கவனித்தார். பிறகுதான் அது ஒரு பாம்பு என்பதை உணர்ந்ததாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
திருவாட்டி டான் உடனே தனது கணவரை அழைத்தார். காரின் முன்பகுதிக்குள் புகுந்த பாம்பு வெளிவந்த பிறகு அவர்கள் அதனை அட்டைப்பெட்டி ஒன்றுக்குள் வைத்து அதிகாரிகள் வரும்வரை காத்திருந்ததாகத் திருவாட்டி டான் கூறினார்.
"பாம்பைக் கொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதனை உயிரோடு மீட்கவேண்டும் என்றே எண்ணினேன்," என்றார் திருவாட்டி டான்.