பள்ளியில் திருடிய சந்தேகத்தின்பேரில் மூன்று சிறுவர்கள் கைது

தெம்பனிஸ் பள்ளியிலிருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15, 16 வயதுகளில் இருக்கும் அவர்கள் விசரணையில் உதவி வருவதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.

தெம்பனிஸ் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து பணமும் கைபேசி 'ஹெட்ஃபோன்' ஒன்றும் காணாமல்போனதென கடந்த புதன்கிழமை காலை 11.50 மணியளவில் தெரிவிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது. அந்தச் சம்பவத்துக்கு முன்பாக ஊழியர் ஒருவரின் வேலை அடையாள அட்டை காணாமல்போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த அட்டையைப் பயன்படுத்தி சிறுவர் மூவரும் பள்ளியின் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் அந்த மூவரின் அடையாளங்களைக் கண்டுபிடித்து சம்பவம் நடந்த அன்றே அவர்களைக் கைது செய்தனர். அனுமதி இன்றி நுழைந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $1,500 வரை அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். திருடியது நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!