போதைப்பொருள் ஒழிப்புக்கு தொடரும் வலுவான ஆதரவு

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கொள்கைகளுக்கு ஒட்டுமொத்த பொதுமக்களின் ஆதரவு வலுவாக இருந்தாலும் போதைப்பொருட்கள், குறிப்பாக கஞ்சா, பற்றி இளையர்கள் தாராள மய கருத்துகளைக் கொண்டி ருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு உள்துறை அமைச்சு சிங்கப்பூரில் மேற் கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 13 முதல் 75 வயது வரையுள்ள 2,000 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் இருந்து இந்த முடிவு பெறப்பட்டுள் ளது. சிங்கப்பூரை போதைப்பொரு ளற்ற நாடாக வைத்திருப்பதற்குக் கடுமையான சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத் திருக்க வேண்டும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் 98 விழுக் காட்டினர் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரை போதைப்பொரு ளற்ற நாடாக வைத்திருப்பதில் சட்டங்கள் நல்ல பலனளிப்பதாக 90 விழுக்காட்டினர் ஒப்புக்கொண் டனர். 8 விழுக்காட்டினர் நடுநிலை யாகக் கருத்துரைத்தனர்.

உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காது என்ற எண் ணத்தில் கஞ்சாவைப் பயன்படுத் தலாம் என ஆய்வில் பங்கேற்ற 13 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இளையர்களில் 68 விழுக்காட் டினர் கஞ்சா பயன்பாடு உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறினர். ஆனால், ஆய்வில் பங்கேற்ற 30 வயதுக்கு மேற்பட்ட வர்களில் 84 விழுக்காட்டினர் அது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!