மண்டாயில் எதிர்காலத்தில் அமை யக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிடம், விருந்தினர்களுக்கு விலங்குகளைப் பற்றி பலவற்றை அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பு களை அளிக்கும்.
அத்தகைய உல்லாச தங்கு மிடங்கள் விருந்தினர்களுக்கு நேரடி அனுபவங்களைத் தருவ தோடு இப்போது கிடைக்காத பல கற்றல் நடவடிக்கைகளையும் இடம்பெறச் செய்வதாக இருக்கும் என்று மண்டாய் பார்க் ஹோல் டிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக்பார்க்லே செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
அந்த உல்லாச தங்குமிடத்திற்கு இனிமேல்தான் பெயரிடப்பட வேண்டும். அது அப்பர் சிலேத்தார் ரெசர்வாரை நோக்கியபடி அமைந் திருக்கும். 2023ல் அது திறக்கப் படும். ஆடம்பர ஹோட்டல்களை நடத்தும் ‘பன்யன் ட்ரீ ஹோல் டிங்ஸ்’ நிறுவனம் சிங்கப்பூரில் முதன்முதலாக அமைக்கும் தங்கு மிடமாகவும் அது இருக்கும்.
மண்டாய் வட்டாரத்தின் வட கிழக்குக் கோடியில் 4.6 ஹெக்டர் பரப்பளவில் அந்த இடம் அமைந் திருக்கும். அதற்கான திட்டங்கள் 2017ல் முதன்முதலாக அறிவிக்கப் பட்டன. அங்கு ஹோட்டல் அறை கள், மேல்நிலை மாடங்கள், மர வீடுகள் எல்லாம் அமைந்திருக்கும். அங்கு அமையும் 24 மர வீடுகளும் பறவைகளின் அலகுகளை ஒத்த வடிவமைப்புடன் இருக்கும். அவை மரங்களின் மேல் அமைந்திருக்கும் என்று மண்டாய் பார்க் ஹோல் டிங்ஸ் தெரிவித்தது.
தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறு வனத்தின் துணை நிறுவனமான மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் நிறு வனத்திற்குச் சொந்தமான அந்த இடத்தை பன்யன் ட்ரீ நிறுவனம் நிர்வகித்து நடத்தும். அந்த இடத் திற்கான செலவு இனிமேல்தான் தெரியவரும்.
மண்டாய் வட்டாரத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக 2023ல் உருமாற்றுவதற் கான திட்டங்களை மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது.
ஜூரோங் பறவைப் பூங்கா அடுத்த ஆண்டு அங்கு இடம் மாறும். 2021ல் ஊசியிலை காட்டுப் பூங்கா அங்கு திறக்கப்படும்.
இந்த இரு பூங்காக்களும் புதிய உல்லாச தங்குமிடமும் இரு புதிய இயற்கையைக் கருப்பொரு ளாகக் கொண்ட உட்புற கவர்ச்சி அம்சங்களும் இப்போது இருக்கும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ‘ரிவர் சஃபாரி’, ‘நைட் சஃபாரி’ ஆகியவற்றுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும்.