கோலாலம்பூரின் சுபாங் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்துக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ஃபயர்ஃபிளை விமானத்தை அதிகமானோர் பயன்படுத்துவதில்லை என்று அதன் தலைமை நிர்வாகி பிலிப் சீ கவலை தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து சிலேத்தார்விமான நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டதிலிருந்து அதன் விமானங் களில் 40% இருக்கைகள்தான் நிரப்பப்படுகின்றன என் றும் தற்காலிக சேவை நிறுத்தத்துக்கு முன் அவற்றின் இருக் கைகளில் 65-70% வரை நிரப்பப்பட்டிருந்தன என்றும்
திரு லீ கூறினார். நேற்று முன்தினம் சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சீ, தற்காலிக சேவை நிறுத்தத்தின்போது இழந்த அதன் பயணிகளைத் திரும்ப ஈர்ப்பதில் ஃபயர்ஃபிளை முக்கிய கவனம் செலுத்தும் என்றும் சொன்னார்.
சாங்கி விமான நிலையக் குழுமம், சுற்றுலா முகவைகள், இதர தொழில்துறை பங்காளிகள் ஆகியோருடன் இணைந்து கடந்த அக்டோபரில் திறக்கப்பட்ட சிலேத்தார் விமான நிலையம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஃபயர்ஃபிளை பணியாற்றும்.
“சிலர் சிலேத்தார் விமான நிலையத்தை பழைய ராணுவ விமானத் தளமாகத்தான் கருதுகிறார்கள். தற்காலிக சேவை நிறுத்தம் அதிக காலம் நீடித்தது,” என்பதையும் ஒப்புக் கொண்ட திரு சீ, சுபாங்கிலிருந்து சிலேத்தாருக்கான பயணம் இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். அது வர்த்தகப் பயணிகளுக்கு நல்ல பலனைத் தந்து வருகிறது,” என்றும் விவரித்தார்.