சிறுவனை காப்பாற்றிய எஸ்பிஎஸ் டிரான்சிட் நிலைய ஊழியர்

சிக்ஸ்த் அவென்யூ எம்ஆர்டி நிலையத்தின் நகரும் படிக்கட்டுகளிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து விழவிருந்த ஐந்து வயது சிறுவனை ஆறே வினாடிகளில் சென்றடைந்து காப்பாற்றியுள்ளார் மூத்த நிலைய மேலாளரான 39 வயது முகம்மது ஃபிர்தவுஸ் முகம்மது யூசோஃப்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு நடந்தது. அன்று நடந்தவற்றை நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கினார் ஃபிர்தவுஸ். நிலையத்துக்குள் நுழைந்த தாயார் தனது மற்றொரு பிள்ளையை ஒரு தள்ளுவண்டி யில் தள்ளியவாறே நகரும் படிக்கட்டுகளில் சென்று கொண்டிருந்தார்.

பின்னால் வந்த அவரது ஐந்து வயது மகன் நகரும் படிக்கட்டுகளில் விளையாடியவாறு வந்தபோது, பிடிதவறி, ஒரு கையால் கைப்பிடியை பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஃபிர்தவுஸ், மிக விரைவாக படிக்கட்டுகளில் ஓடி பையனைப் பிடித்து தன் பக்கம் இழுத்தபோது, கால் இடறி கீழே விழுந்தார். இருப்பினும் பையன் காப்பாற்றப்பட்டதில் நிம்மதி என்றார் ஃபிர்தவுஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!