உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் துணை போலிஸ் அதிகாரி ஒருவரை இடித்துத் தள்ளிய காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்று (டிசம்பர் 20) தகவலளித்த போலிசார், கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 8.11 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டனர்.
கண்மூடித்தனமான செய்கையால் போலிசாருக்கு காயம் விளைவித்ததற்காக 52 வயதான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த 24 வயது துணை போலிஸ் அதிகாரி சுயநினைவுடன் இருந்த நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
மின்விளக்குடன் கூடிய குறுந்தடியை அசைத்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியை, மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த டொயோட்டா எம்பிவி மோதியதையும் அதனையடுத்து அந்த அதிகாரி கீழே விழுந்ததையும் காணொளி காட்டியது.
இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity