மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களின் சேவையை டெலிவரூ நிறுத்தியது

மின்சார ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்துவ தற்கான தடை நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படத் தொடங்கியதால் உணவு விநியோக சேவையில் தனிநபர் நடமாட்ட சாதனங்களை (பிஎம்டி) உபயோகிப்போரை பணி யில் அமர்த்துவதை டெலிவரூ நிறுவனம் நிறுத்தியுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் வாகனங்களை மாற்றாத அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக வேறு வாகனத்திற்கு மாறுவதற்கான மானியத்திற்கு விண்ணப்பிக்காத பிஎம்டி ஓட்டுநர்கள், தங்களது வாகனங்களை மாற்ற விரும்புகிறார் கள் என்பதை உறுதிப்படுத்தும் வரை டெலிவரூ நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று டெலிவரூ நிறுவன செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, விதிகளை மீறிய இரு மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணயம் நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு $2,000 வரை அபராதம், மூன்று மாதம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விதியை மீறும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதே வேளையில், உந்து நடமாட்டச் சாதனங்கள் உரிய பாதுகாப்பு தரங்களுடன் இருக்கின்றனவா என்பதையும் அதிகாரிகள் சோதிப்பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!