லிட்டில் இந்தியாவில் இவ்வாண்டின் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக கிளைவ் ஸ்திரீட்டில் மாட்டுத் தொழுவம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து மூன்று பசுக்கள், இரண்டு கன்றுகள், இரண்டு ஆடுகள், ஒரு காளை ஆகியவை நேற்று மாலை தொழுவத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
தொழுவத்துக்குச் செல்வ தற்கு முன்பு தேக்கா பிளேஸ் கடைத்தொகுதி, கேம்பல் லேன் ஆகிய இடங்களை பசுக்களும் ஆடுகளும் வலம் வந்தன.
‘கம்பத்து பொங்கல்’ என்ற கருப்பொருளுடனான பொங்கல் கொண்டாட்டத்தில் இந்த மாட்டுத் தொழுவம் சிறப்பு அங்கம் வகிக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்காரம் செய்யப்படும். இம்மாதம் 19ஆம் தேதி வரை கால்நடைகள் இந்தத் தொழுவத்தில் இருக்கும்.