வீவக வீடுகளுக்கான விற்பனை முப்பது ஆண்டுகள் இல்லாத சரிவைக் கண்டுள்ளது. ஏப்ரல் மாத விற்பனை மார்ச் மாதத்தைக் காட்டிலும் 78.3 விழுக்காடு குறைந்தது.
நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தால் வீடுகளைப் பார்வையிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. கடந்த மாதத்தின்போது 423 வீட்டுகள் மட்டுமே கை மாறின. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தின் எண்ணிக்கையைக் காட்டிலும் 78.1 விழுக்காடு குறைவு என்று எஸ்ஆர்எக்ஸ் புரோபர்டி சொத்து நிறுவனத்தின் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
1990ஆம் ஆண்டு மே மாதத்தில் விற்கப்பட்ட 778 வீடுகளையும் 2003ஆம் ஆண்டு ஏப்ரலில் சார்ஸ் நோய்ப்பரவல் நிலவியபோது விற்கப்பட்ட 2,160 வீடுகளைக் காட்டிலும் இது ஆகக் குறைவு. வீட்டு விலைகளும் இக்காலக்கட்டத்தில் குறைந்துள்ளன. மூன்று அறை வீடுகளின் விலை 1.5 % குறைந்தன. நான்கு அறை வீடுகளின் விலையும் எக்செக்கியூடிவ் வீடுகளின் விலையும் முறையே 0.2 விழுக்காடும் 1.8 விழுக்காடும் குறைந்தன. ஐந்து அறை வீடுகளின் விலை 0.2 விழுக்காடு உயர்ந்தது.