துவாசில் உள்ள சரக்கு கிடங்கு ஒன்றில் இன்று (மே 13) அதிகாலை வேளையில் மூண்ட தீயை அணைக்க கிட்டத்தட்ட 70 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
தீயின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த கட்டடத்தின் சுவர்கள் விரிசல் விட்டு உடைந்தன.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
காலை 6.20 மணிக்கு தகவலறிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 16 தீயணைப்பு வாகனங்களை பணியில் ஈடுபடுத்தியது.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, 2B துவாஸ் அவென்யூ 12ல் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடமான அந்த சரக்கு கிடங்கின் இரண்டாவது மாடியில் தீ மளமளவென எரிந்துகொண்டிருந்தது.
இயந்திரங்கள், பிளாஸ்டிக் ரெசின் போன்றவை தீக்கிரையாகின. தீ மூண்டதற்கான காரணம் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online