துவாஸ் சரக்கு கிடங்கில் தீ; 70 தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

துவாசில் உள்ள சரக்கு கிடங்கு ஒன்றில் இன்று (மே 13) அதிகாலை வேளையில் மூண்ட தீயை அணைக்க கிட்டத்தட்ட 70 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது.

தீயின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த கட்டடத்தின் சுவர்கள் விரிசல் விட்டு உடைந்தன.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

காலை 6.20 மணிக்கு தகவலறிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 16 தீயணைப்பு வாகனங்களை பணியில் ஈடுபடுத்தியது.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, 2B துவாஸ் அவென்யூ 12ல் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடமான அந்த சரக்கு கிடங்கின் இரண்டாவது மாடியில் தீ மளமளவென எரிந்துகொண்டிருந்தது.

இயந்திரங்கள், பிளாஸ்டிக் ரெசின் போன்றவை தீக்கிரையாகின. தீ மூண்டதற்கான காரணம் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!