தமிழ் முரசு மின்னிதழ் சந்தாதாரர்கள் 780% அதிகரிப்பு

தமிழ் முரசு மின்னிதழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 780% அதிகரித்துள்ளது.

கொவிட்-19 கிருமித் தொற்று முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதிகமானோர் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகின்றனர். இவ்வேளையில் எஸ்பிஎச் குழுமத்தின் நாளிதழ்களிலும் மின்னிதழ்களிலும் அவர்கள் முன்பைவிட அதிக நேரம் செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து எஸ்பிஎச் நிறுவனம் கடந்த மாதம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் மொத்தம் 1,247 பேர் பங்கேற்றனர். அவர்களில் 40 விழுக்காட்டினர் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நாளிதழ் வாசிப்பதாகக் கூறினர்.

எஸ்பிஎச் நிறுவனம் வெளியிடும் நான்கு மொழி நாளிதழ்களிலும் இந்த ஏற்றம் காணப்பட்டது.

எஸ்பிஎச்சின் செய்தி இணையத்தளங்களையும் செயலிகளையும் நாடுவது அதிகரித்துள்ளது.

அதுபோல, மின்னிலக்கப் பதிப்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் கூடியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மின்னிதழ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து இருக்கிறது. தமிழ் முரசைப் பொறுத்தமட்டில், இந்த உயர்வு 780 விழுக்காடாக இருந்தது.

தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதி, மின்னிலக்கப் பதிப்பு ஆகியவற்றுக்கு சந்தாதாரராக: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpackages&pcode=tm

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!