குடும்ப வன்முறை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டது என்று போலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இவ்வாண்டு ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 6ஆம் தேதிவரை குடும்ப வன்முறை தொடர்பாக தங்களுக்கு 476 புகார்கள் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்து இருக்கிறது.

இது கிருமித்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நோய்ப் பரவல் முறியடிப்பு காலகட்டத்துக்கு முன்னர் இருந்த 389 புகார்களுடன் ஒப்பிடுகையில் 22% அதிகம் என்று போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கின்றனர்.

காயம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபடுவது, தாக்குதல் நடத்துவது, தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக மிரட்டுவது ஆகியவற்றுடன் தவறாக ஒருவரை அடைத்து வைப்பது போன்றவை தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக போலிசார் கூறுகின்றனர்.

இதில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் பாதிப்பு அடையக்கூடிய சாத்தியத்தை போலிசார் மதிப்பிட்டு, அதிக பாதிப்படையக்கூடிய அபாயத்தில் உள்ளவர்களை, அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றாலும், சமூக சேவை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பர்.

மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை போலிசார் அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களுக்கு மேலும் உதவி தேவைப்படுகிறதா என்பதைக் கண்டறிவர் என்று போலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!