(காணொளிகள்) செங்காங் எம்ஆர்டி நிலைய கண்ணாடிக் கதவை மோதிய காட்டுப்பன்றி

செங்காங் எம்ஆர்டி நிலைய வாசலில் ஆடவர் ஒருவரை வழிமறித்த காட்டுப் பன்றி ஒன்று, எம்ஆர்டி நிலையத்தின் கண்ணாடி கதவு ஒன்றை முட்டித் தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கண்ணாடிக் கதவு உடைந்து சிதறியதைக் காட்டும் படத்தை ‘மதர்ஷிப்’ செய்தி இணையப்பக்கம் வெளியிட்டிருந்தது.

Remote video URL

இந்த விபத்து எப்போது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், இன்று காலை பார்வையிடபோது செங்காங் எம்ஆர்டி நிலையத்தின் ஒரு கண்ணாடிக் கதவு பயன்பாட்டுக்கு இல்லாதபடி வேலியிடப்பட்டிருந்தது.

கதவை உடைத்துக்கொண்டு பன்றி எங்கே சென்றது என்பது தெரியவில்லை.

Remote video URL

மனித நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதிக்குள் காட்டுப்பன்றி எவ்வாறு வந்தது என்பதும் விந்தையாகவே உள்ளது. ஆங்கர்வேல், ஃபெர்ன்வேல், பொங்கோல் வட்டாரங்களில் உள்ள காட்டுப் பகுதிக்குள்ளிருந்து அது வந்திருக்கலாம்.

செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் பேட்டையில் காட்டுப்பன்றி ஒன்று செல்வதைக் காட்டும் மற்றொரு காணொளியும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது.

இவ்விரு காணொளிகளிலும் காணப்பட்டது ஒரே காட்டுப்பன்றியாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!