சிங்கப்பூரில் மேலும் 78 விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டன
இன்றைய நிலவரப்படி, மேலும் 78 விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து மொத்தம் 241 விடுதிகள் அவ்வாறு கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதிகளாக மாற்றப்பட்ட 72 தொழிற்சாலைகள் அவற்றுள் அடக்கம்.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு குணமடந்து வந்தவர்கள் தங்கியிருந்த, ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட மூன்று விடுதிகளின் மூன்று புளோக்குகளும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இத்துடன் 14 அத்தகைய விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி 87,000 ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்; அல்லது பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் அவர்கள் பணிக்குத் திரும்ப முடியும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online