கொவிட்-19 காரணமாக இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தை சிங்கப்பூரர்கள் வீட்டில் இருந்தவாறு கொண்டாட இருக்கும் நிலையில், சிங்கப்பூரர்களின் சமூக உணர்வைப் பாராட்டும் வகையில் இவ்வாண்டின் தேசிய தினப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.
‘Everything I Am’ எனும் தலைப்பு கொண்டு இப்பாடலுக்கு ஜோஷ்வா வான் இசையமைத்துஉள்ளார். பாடலை பாடகர் நேதன் ஹார்டோனா பாடியுள்ளார்.
சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று இப்பாடல் ஊக்குவிக்கிறது.
இப்பாடல் கடந்த ஆண்டு இயற்றப்பட்டதாகவும் இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி இதை மேலும் முக்கியமானதாக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுடன் இசைக் காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். இதை உள்ளூர் பட இயக்குநர் ஹ ஷுமிங் இயக்கியுள்ளார்.
இந்தக் காணொளி யூடியுப்பிலும் தேசிய தினப் பேரணி இணையத்தளத்திலும் இன்று வெளியிடப்பட்டது.
இக்காணொளியை எடுக்கத் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக் கதைகள் தம்மைத் தூண்டியதாக திரு ஹ தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசின் சந்தாதாரராகுங்கள்! https://bit.ly/2C7OsaY