‘சிங்கப்பூரர்களின் சமூக உணர்வைப் பாராட்டும் தேசிய தினப் பாடல்'

கொவிட்-19 காரணமாக இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தை சிங்கப்பூரர்கள் வீட்டில் இருந்தவாறு கொண்டாட இருக்கும் நிலையில், சிங்கப்பூரர்களின் சமூக உணர்வைப் பாராட்டும் வகையில் இவ்வாண்டின் தேசிய தினப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.

‘Everything I Am’ எனும் தலைப்பு கொண்டு இப்பாடலுக்கு ஜோஷ்வா வான் இசையமைத்துஉள்ளார். பாடலை பாடகர் நேதன் ஹார்டோனா பாடியுள்ளார்.

சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று இப்பாடல் ஊக்குவிக்கிறது.

இப்பாடல் கடந்த ஆண்டு இயற்றப்பட்டதாகவும் இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி இதை மேலும் முக்கியமானதாக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுடன் இசைக் காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். இதை உள்ளூர் பட இயக்குநர் ஹ ஷுமிங் இயக்கியுள்ளார்.

இந்தக் காணொளி யூடியுப்பிலும் தேசிய தினப் பேரணி இணையத்தளத்திலும் இன்று வெளியிடப்பட்டது.

Remote video URL

இக்காணொளியை எடுக்கத் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக் கதைகள் தம்மைத் தூண்டியதாக திரு ஹ தெரிவித்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசின் சந்தாதாரராகுங்கள்! https://bit.ly/2C7OsaY

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!