சிங்கப்பூருக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாதுகாப்பான முறையில் விமானப் பயணங்களைத் தொடங்குவது குறித்து இரு தரப்பும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
கொவிட்-19 தொற்றுச் சூழலில் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பது தொடர்பான தரநிலைகளை உருவாக்குவதில் ஒத்துழைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
விமானச் சேவைகள் தொடங்குவதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வரும் என்றும் பயணிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.
பயணிகள், விமானச் சேவை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் திட்டமிடப்படும்.