புதிய சவாலில் இறங்கியுள்ள வான்குடை வீரர்கள்

இவ்வாண்டின் தேசிய தினத்தன்று ‘ரெட் லயன்ஸ்’ எனும் வான்குடைப் பிரிவு வீரர்கள் புதிய சவால் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றனர்.

வழக்கமாக, தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் இந்த வான்குடை வீரர்கள் தரையிறங்குவர்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இம்முறை மாற்று

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ரெட் லயன்ஸ்’ வான்குடை வீரர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பிரிவினர் செங்காங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள திடலிலும் மற்றொரு பிரிவினர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள திடலிலும் தரையிறங்குவர்.

தரையிறங்கும் இடம் மட்டுமின்றி விமானத்திலிருந்து குதிக்கும் உயரமும் வேறுபடுகிறது.

2018ஆம் ஆண்டில் 3,810 மீட்டர் உயரத்திலிருந்து வான்குடை வீரர்கள் குதித்தனர்.

ஆனால் இம்முறை 1,524 மீட்டர் உயரத்திலிருந்து அவர்கள் குதிக்கின்றனர்.

இதனால் வானத்தில் வழக்கமாக அவர்கள் செய்யும் சாகசங்கள் ஏதும் இருக்காது.

மாறாக, விமானத்திலிருந்து குதித்ததும் வான்

குடையை விரித்து தேசிய கொடியையும் தேசிய தின பதாகைகளையும் ஏந்திக்கொண்டு அவர்கள் நேராக தரையை நோக்கி வருவார்கள்.

இதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.

பாவனைப் பயிற்சிக் கூடத்திலும் வீரர்கள் பயிற்சி

செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!