இந்தியாவிலிருந்து திரும்பிய 1 வயது குழந்தைக்கு கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு பிரத்தியேக வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு நேற்று (ஆகஸ்ட் 3) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இந்தியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இந்தியாவிலிருந்து திரும்பிய ஒரு வயதுக் குழந்தையும் அவர்களில் ஒருவர். சார்ந்திருப்போர் அனுமதி அட்டையைக் கொண்டிருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு, ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த 40 வயது நிரந்தரவாசி ஆடவர், நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொருவர்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 2 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 5 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 3 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொவிட்-19 தொற்றிய, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!