'முரசிடம் கேளுங்கள்': மசேநி சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் ஷீனா

“55 வய­தான பிறகு தமது மத்­திய சேம­ நிதி (மசேநி) கணக்­கி­லி­ருந்து சேமிப்­பு­களை எடுக்க முடி­யாது, 55 வயதை எட்­டும்­போது சேமிப்­பு­களை எடுக்­கா­விட்­டால் பின்­னர் பணத்தை எடுக்க முடி­யாது,” ­போன்ற பல தவ­றான கருத்­து­கள் மக்­க­ள் இடையே இன்­ற­ள­வும் நில­வு­கின்றன.

அவை உண்மை என்று நம்பி அச்­செய்­தி­களை மற்­ற­வர்­க­ளி­டம் அவர்­கள் பகிர்­வ­தும் உண்டு.

இதை முறி­ய­டிக்­கும் வண்­ணம், மசேநி குறித்த விவ­ரங்­களை விளக்கி உண்மை என்­ன­வென்­பதை மக்­க­ளுக்­குப் புரி­ய­வைக்­கி­றார் மசேநி பீஷான் சேவை நிலை­யத்­தின் துணை வாடிக்­கை­யா­ளர் சேவை நிர்­வா­கி­யாக பணி­யாற்­றும் திரு­மதி ஷீனா கஸ்­தூரி, 35.

மசேநி குறித்த ஐயங்­க­ளைத் தெளி­வு­ப­டுத்த நிலை­யத்­திற்கு வரு­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோர் முதி­ய­வர்­கள் என்­றும் அவர்­கள் சொல்­வ­தைப் பொறு­மை­யாக கேட்­பது அவ­சி­யம் என்­றும் மசேநி வாடிக்­கை­யா­ளர் சேவைத் துறை­யில் ஏறக்­கு­றைய 13 ஆண்­டு­கால அனு­ப­வ­மு­டைய திரு­மதி ஷீனா சொன்­னார்.

“சில நேரங்­களில் மக்­கள் அதி­கம் கோபப்­ப­டு­வார்­கள். பணம் எடுக்­க­லாம் என்று என் நண்­பர் சொன்­னார், நானும் எடுக்க போகி­றேன் என்று வாதி­டு­வார்­கள். உண்மைத் தக­வ­லைப் பொறு­மை­யு­டன் அவர்­க­ளுக்கு விளக்­கு­வோம்,” என்­றார் திரு­மதி ஷீனா.

ஓய்­வுக்­கா­லத் தொகை, சொத்து உரிமை ஆகிய அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு, தகுதி பெறு­பவர்­கள் 55 வயதை எட்­டி­ய­வு­டன் மசே­நிதி கணக்­கி­லி­ருந்து சேமிப்­பு­களை எடுக்க முடி­யும் என்­றும் 55 வயதை எட்­டி­ய­து­டன் எந்த நேரத்­தி­லும் சேமிப்­பு­களை எடுக்க அவர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்றும் விளக்­கி­னார் திரு­மதி ஷீனா.

“வங்­கி­க­ளை­விட மசேநி கணக்­கில் இருக்­கும் தொகை கூடு­தல் வட்­டி­யைப் பெறு­கிறது. மசேநி உறுப்­பி­னர்­க­ளி­டம் இதை எடுத்­து­ரைக்­கும்­போது சில வேளை­களில் அவர்­கள் சேமிப்பை எடுக்க விரும்­ப­மாட்­டார்­கள். அவர்­க­ளி­டம் இது­குறித்து விளக்­கும்­போது அவர்­களுக்கு தெளி­வும் மன­வு­று­தி­யும் கிடைக்­கிறது,” என்­றார் திரு­மதி ஷீனா.

மசேநி உறுப்­பி­னர் ஒரு­வர் ஒவ்­வொரு மாத­மும் $20, $50 போன்ற சிறிய தொகையை மசேநி கணக்­கில் சேமித்து வந்­ததை திரு­மதி ஷீனா நினை­வு­கூர்ந்­தார்.

“அவர் தற்­போது ஒவ்­வொரு மாத­மும் $400 முதல் $500 வரை மாதாந்­திர வழங்­கு­தொ­கை­யைப் பெற்று வரு­கி­றார். அவர் சேமித்து வந்த சிறு தொகை கூட்டு வட்­டி­யாக (compund interest) ஆண்டுக்கு ஆண்டு அதி­க­ரித்து வந்­தது,” என்று திருமதி ஷீனா கூறி­னார்.

ஓய்­வுக்­கால செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு கையில் போதிய அளவு பணம் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த ஒரு­வர் பணக்­கா­ர­ராக இருக்­க­வேண்­டும் என்­பது அவ­சி­ய­மில்லை.

சிறு தொகை­யாக இருந்­தா­லும் முன்­கூட்­டியே சேமித்து வந்­தால், பணக்­க­வ­லை­யின்றி ஓய்­வுக்­காலத்தை கழிக்­க­லாம் என்­பதை இச்­சம்­ப­வம் எடுத்து காட்­டு­கிறது.

மசேநி குறித்த மேல் விவ­ரங்­களுக்கு cpf.gov.sg என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

'முரசிடம் கேளுங்கள்'

மசேநி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா? 'முரசிடம் கேளுங்கள்' என்ற புதிய கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைந்திருங்கள். உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் வகையில் மத்திய சேம நிதிக் கழகம் கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளிக்கும்.

கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இம்மாதம் 14ஆம் தேதி வெளிவரும் தமிழ் முரசில் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!