நிலையான அதிகாரப் பத்திரத்தை (Lasting Power of Attorney) சமர்ப்பிக்க, இணையவாசல் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கோருகிறது.
ஒருவர் சுயமாக முடிவெடுக்க இயலாத நிலையில், அவர் சார்பில் இன்னொருவர் முடிவெடுப்பதற்கான சட்ட ஆவணத்தை இணையத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்பது பொதுக் காப்பாளர் அலுவலகம் முன்மொழியும் திட்டமாகும். விண்ணப்பதாரர்களுக்கு இது வசதியாக இருப்பதுடன் பதிவு செய்வதற்கான காலமும் குறைக்கப்படுகிறது.
இணையத்தில் இவ்வாறு சமர்ப்பிக்கும் முறையை அனுமதிக்க மனநல ஆற்றல் சட்டத்தைத் திருத்த அமைச்சு முன்மொழிகிறது.
திருத்தச் சட்டம் தொடர்பில் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
தற்போதைய முறையில் பதிவு செய்வதற்கு மூன்று வாரங்கள் ஆகிறது. இணையம் வழி அது எட்டு நாட்களாகக் குறைக்கப்படுகிறது.