வீட்டில் குணமடைந்து வரும் பக்கவாத நோயாளிகளுக்கு உதவ எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய இயந்திர சாதனம் டான் டோக் செங் மருத்துவமனையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இயந்திரத்தின் உதவியோடு நோயாளிகள் தங்கள் கரங்களை வலுப்
படுத்த தொடர்ந்து பயிற்சிகளைச் செய்யலாம்.
இதற்காக அவர்கள் அடிக்கடி மருந்தகத்துக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லத் தேவை இல்லை.
எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய இந்த இயந்திரம் 14 கிலோ எடை கொண்டது. அதற்கு ‘எச்-மேன்’ என்று பெயரிடப்
பட்டுள்ளது. அந்தச் சாதனத்தை மேசை மேல் வைத்து பயிற்சி செய்யலாம். ஜாய்ஸ்டிக் வடிவிலான கைப்பிடி, சாதனத்தின் கணினித் திரையுடன் பொருத்தப்பட்டுள்ளது. கைப்பிடியின் வழியாக நோயாளியின் பலத்தை சாதனத்தால் உணர முடியும் என்றும் அதற்கேற்ப அது செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.