10 வயதில் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த தமது பாட்டிக்குத் துணையாக மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்த மனிஷ், அங்கு பாட்டிக்கு கனிவுடனும் பொறுமையுடனும் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் கண்டு வியந்தார்.
ஒவ்வொரு தடவையும் முகம் சுளிக்காமல் பொறுமையாக விவரத்தைக் கூறி பாட்டி எந்த கட்டத்திலும் பயமோ சங்கடமோ கொள்ளாமல் கவனித்துக்கொண்ட அந்த மருத்துவர்களைப் போல் தாமும் ஆக வேண்டும் என்று அந்த பிஞ்சு வயதில் மனிஷ் வாரியர் முடிவெடுத்தார்.
உயர்நிலைப் பள்ளிக்கு சென்று இணையத்தைப் பயன்படுத்தி மருத்துவத் துறையைப் பற்றியும் மருத்துவராவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் படிப்படியாகத் தெரிந்துகொண்டார்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தில் பயிலும் இவர், 2018ஆம் ஆண்டு ‘ரெயின்போ சென்டர்’ என்னும் அமைப்பின் வழி குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு உதவும் சமூகப் பணியில் இறங்கினார்.
“இந்த குழந்தைகளைக் குறைபாடுடையவர்கள் என்று நினைப்பதைத் தவிர்த்து இவர்களும் பிற குழந்தைகள்போலத்தான் என்ற பார்வையில் பார்க்க வேண்டும். இவர்களுக்கும் அதே ஆசை, அதே உணர்ச்சிகள்தான் என்று அந்த இடத்தில் இருந்த ஒரு தொண்டூழியர் என்னிடம் கூறினார். அது என்னால் மறக்கமுடியாத ஒன்று,” என்று குழந்தை மருத்துவராக விரும்பும் மனிஷ் கூறினார்.
‘ஏ’ நிலை தேர்வு முடிந்து தற் போது தேசிய சேவை ஆற்றிவரும் மனிஷ், கடந்த ஆண்டு நண்பர் ஒருவருடன் இணைந்து வசதி குறைந்த பிள்ளைகளுக்கு இலவசமாக தொழில்நுட்பக் குறியீடுகள் பற்றிய வகுப்புகள் நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.