தென்மேற்கு வட்டாரத்தில் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த நீரிழிவு நோயாளிகள் 600 பேருக்கு இன்சுலின் மருந்து, ஊசிகள், இதர அத்தியாவசிய பொருள்கள் உட்பட ஓராண்டுக்கான பராமரிப்புத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
அனைத்துலக மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் பெக்டன், டிக்கின்சன் நிறுவனம் மற்றும் 'டயபெட்டிஸ் சிங்கப்பூர்' அறநிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிறுவனம் $124,000 மதிப்பிலான 2,400 பிடி நீரிழிவு பராமரிப்புத் தொகுப்புகளை பயனாளர்களுக்கு வழங்கின. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 பிடி அல்ட்ரா-ஃபைன் புரோ
4 மி.மீ. ஊசிகள் உட்பட இன்சுலின் ஊசி போடுவதற்குத் தேவையான பொருள்கள் இருக்கும்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'டயபெட்டிஸ் சிங்கப்பூர்' அமைப்பின் ஜூரோங் வெஸ்ட் அலுவலகத்தில் நேற்று இந்தத் திட்டம் தொடங்கியது.