சிங்கப்பூரில் மே 17 முதல் ‘அமைதித் தோட்டம்’

சிங்கப்பூரின் முதலாவது உள்ளூர் அஸ்தி சாம்பல் தோட்டம் மே 17 முதல் செயல்படும். ‘அமைதித் தோட்டம்’ என்று பெயரிடப்பட்டு உள்ள அந்தத் தோட்டம் 9,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அது சுவா சூ காங் இடு காட்டு வளாகத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளது.

சமய அமைப்புகளுடன், ஈமச்சடங்கு தொழில்துறை யுடன் பலவற்றையும் முழுமையாக கலந்து ஆலோசித்து இந்தத் தோட்டத்தைத் தேசிய சுற்றுப்புற வாரியம் உருவாக்கி இருக்கிறது.

பொதுமக்கள் அஸ்தியைத் தெளிக்க மேலும் ஒரு வாய்ப்பை இந்தத் தோட்டம் வழங்குகிறது.

சமயச் சார்பற்ற இந்தத் தோட்டம் நடந்து சென்று அஸ்தியைத் தெளிப்பதற்கான வசதிகளைக் கொண்டது. தோட்டத்தில் சமயச் சடங்குகளுக்கு அனுமதி இராது.

இருந்தாலும் தோட்டத்தின் வடக்குப் புற வாயிலுக்கு அருகே இருக்கும் வழிபாட்டு வசதியைப் பயன்படுத்திக் கொண்டு வருகையாளர்கள் எளிய முறையில் சடங்கு களைச் செய்யலாம். தோட்டத்தில் அஸ்தியைத் தெளிக்க விரும்புவோருக்குக் கட்டணம் $230.

இதுபோன்ற இரண்டாவது தோட்டம், 2022ல் மண்டாய் தகனச்சாலை வளாகத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!