சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்ட 34 வயது முன்னாள் சமய போதகரும் இல்லத்தரசியுமான சிங்கப்பூர் மாது ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ருக்காயா ராம்லி என்ற அந்த மாது அவரது கணவரால் தீவிரவாத சிந்தனைப் போக்கை மேற்கொண்டார். இதில் அவரது கணவரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முன்னதாக கைது செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ருக்காயாவின் கணவர் கைது செய்யப்பட்டபின் ருக்காயாவிற்கு சமய அறிவுரை போதனை இடம்பெற்றது. ஆனால், தாம் கொண்டிருந்த தீவிரவாத மனப்போக்கை கைவிட அவர் மறுத்தார்.
இவரின் கணவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பின்பு ருக்காயாவிற்கு எதிராக கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் ருக்காயா இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.