கொவிட்-19 தடுப்பூசிக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் அடுத்தாண்டு சீனப் புத்தாண்டின்போது தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் இன்று தெரிவித்தார்.
இன்ஸ்டகிராம் நேரலையின்போது பொதுமக்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது திரு ஓங் இதனைக் கூறினார்.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக திரு ஓங் பதலளித்தார். பூஸ்டர் தடுப்பூசிகளைத் தேவைப்படுவோர், அடுத்த ஆண்டு பிப்ரவரி சீனப் புத்தாண்டுக்காலக் கட்டத்தின்போது போட்டுக்கொள்ளலாம்.
சீனப் புத்தாண்டுக்காலக் கட்டத்தின்போது போட்டுக்கொள்ளலாம்.
பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்பட்டால் மக்கள் அவற்றை சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தின்போது அடுக்கலாம்.
தற்போதைய தடுப்பூசிகளின் தாக்கம் ஈராண்டு வரை நீடிப்பதால் உடலிலுள்ள தடுப்பு சக்தியை அதிகரிக்க அந்தத் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். உருமாறியுள்ள புதிய கொரோனா கிருமி வகைகளுக்கு எதிராக இது பாதுகாப்பினைத் தரும் என்று அவர் கூறினார்.