சிங்கப்பூரின் தேசிய தடுப்
பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி, மொடர்னா ஆகிய தடுப்பூசி
களுடன் சினோவேக், சினோஃபார்ம், ஆஸ்ட்ரசெனக்கா, ஜான்சன் அண்ட் ஜான்சன், கொவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளும் உலக சுகாதார நிறு
வனத்தின் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலின்கீழ் இடம்பெறுகின்றன.
சினோவேக், சினோஃபார்ம், ஆஸ்ட்ரசெனக்கா, ஜான்சன் அண்ட் ஜான்சன், கொவிஷீல்டு ஆகிய
தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பவர்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தின் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டு இரண்டு வாரங்கள் கழித்து, ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று ஏற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
"நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி, மொடர்னா ஆகிய தடுப்பூசிகளைத் தவிர்த்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பட்டியலில் இடம்பெறும் தடுப்பூசிகளையும் சிங்கப்பூர் ஏற்றுக்கொள்கிறது," என்றார் அமைச்சர் ஓங்.