நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் கிரேட்எர்த் கட்டுமான நிறுவனம் அதன் செயல்பாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறது.
தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் (பிடிஓ) திட்டத்தின்கீழ் ஐந்து கட்டுமானத் தளங்களில் அது செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு அது அந்தக் கட்டுமானத் தளங்களை மூடியது.
வர்த்தகத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் திரு கோ எங் ஹுவீ தெரிவித்தார். இதன் காரணமாக கிட்டத்தட்ட 2,900 புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தாமதமடைந்துள்ளன.