கவலையில் பீஷான் பேருந்துச் சந்திப்பு நிலையப் பணியாளர்கள்

தங்களை கொவிட்-19 தொற்றி, அதன்மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கும் அதனைப் பரப்பிவிடுவோமோ என்று பீஷான் பேருந்துச் சந்திப்பு நிலையத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்களும் முகப்பு ஊழியர்களும் கவலைப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் தெரிவித்து இருக்கிறார்.

தனிமை உத்தரவின்கீழ் தாங்கள் வைக்கப்பட்டால் தங்களது அன்றாடப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுமோ என்பது பற்றி ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதாகவும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக திரு யோங் கூறியுள்ளார்.

மற்ற சிலர், தங்களது பணி அட்டவணையில் செய்யப்படும் தொடர் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர்.

பீஷான் பேருந்துச் சந்திப்பு நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்த திரு யோங், "பேருந்து ஓட்டுநர் ஒருவரைக் கிருமி தொற்றியதை அடுத்து, வேறொரு தங்குமிடத்தைத் தேடிக்கொள்ளுமாறு வீட்டு உரிமையாளர் அவரிடம் கூறியதாக எனக்குத் தெரியப் படுத்தப்பட்டது. தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தினர் மேற்கொண்ட உடனடி ஏற்பாடுகளின் பலனாக அவருக்கு புதிய தங்குமிடம் தேடித் தரப்பட்டது," என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!