அதிகாரம் பெறாத வடிகால் பணிகளை மேற்கொண்டதற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு எதிராக பொதுப் பயனீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் கடந்த மாதம் நீண்ட நேரம் வெள்ளம் ஏற்பட, ‘சாம்வோ’ எனும் அந்த நிறுவனத்தின் வடிகால் பணிகளே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தெம்பனிஸ் அவென்யூ 10, பாசிர் ரிஸ் டிரைவ் 12 சாலைச் சந்திப்பில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனமோட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
அந்தச் சாலைச் சந்திப்பில் பொதுவாக வெள்ளம் ஏற்பட்டதில்லை. ஆனால் அன்றைய தினம் அங்கு வெள்ளம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. சிங்கப்பூரில் பெரும்பாலான நேரத்தில் வெள்ளம் ஏறக்குறைய 30 நிமிடங்களுக்குள் வடிந்துவிடும்.