நூற்றுக்கணக்கான பேருந்து ஓட்டுநர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் பயணிகள் பேருந்துச் சேவைகளுக்குக் காத்திருக்கவேண்டிய நேரம் அதிகரிக்கலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு பாதிக்கப்பட்ட சேவைகளில் பெரும்பாலானவைக்கு அதிகபட்சம் கூடுதலாக ஐந்து நிமிடங்களுக்குக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஒரு சில சேவைகளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம்.