ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள லோரோங் ஆ சூவில் அடுத்த மாதம் பேருந்துகள் அருகில் வருவதைத் தெரிவிக்கும் புதிய மின்னியல் காட்சிப்பலகைகள் வைக்கப்படவுள்ளன. பேருந்துக்கு வழிவிட வேண்டும் என்று வாகனமோட்டிகளைத் தூண்டுவது அதன் நோக்கமாகும்.
பேருந்துகளுக்கான அதன் 'மெய்நிகர் வழி முதலில் செல்வதற்கான முன்னுரிமை' முன்னோடித் திட்டத்தை அடுத்த மாதத்தின் நடுவிலிருந்து வரும் ஜனவரி வரை சோதிக்கப்போவதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று கூறியது.
திட்டத்தின் கீழ், ஹவ்காங் அவென்யூ மூன்றை நோக்கிச் செல்லும் லோரோங் ஆ சூவில் மின்னியல் காட்சிப் பலகைகள் வைக்கப்படும். பேருந்து வரும்போது உணர் கருவிகளைக்கொண்டு, தானாகவே மின்னியல் பலகைகளில் ஒளியூட்டப்படும். அது பேருந்துகளுக்கு வழிவிட மற்ற வாகனங்களைத் தூண்டும்.
நமது சாலைகளில் கனிவான நடத்தையையும் சீரான பயணங் களையும் ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய வழியிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
காட்சிப்பலகையைச் சோதிக்கும் பணி நேற்று தொடங்கியது.
சோதனைகள் நடைபெறும்போது லோரோங் ஆ சூவின் இப்பகுதியில் இடது பக்கம் திரும்பும் வாகனமோட்டிகள் எப்போதும்போல கார்களை இடது பக்கம் திருப்பலாம் என்று ஆணையம் கூறியது.