பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் திட்டம் ஒன்று மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான நிதி உதவித் திட்டம் - பசுமைப் பிரிவு என்பது திட்டத்தின் பெயராகும்.
கழிவு, வளங்களின் பயனீடு, கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான தீர்வுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு உதவுவது திட்டத்தின் இலக்காகும்.
இந்நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதால் வங்கிகளுக்கு ஏற் படக்கூடிய இடரில் 70 விழுக்காட்டை இத்திட்டம் ஏற்றுக்கொள்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் முதல் தேதி தொடங்கிய மேம்படுத்தப்பட்ட திட்டம், வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
மாசற்ற எரிசக்தி, மறுபயனீடு செய்யும் பொருளியல், பசுமை உள்கட்டமைப்பு, மாசற்ற போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு திட்டம் உதவும்.
பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தாக்க நிறுவனங் கள் புதிய எல்லைகளைத் தொடும் என்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகையில் கூடுதல் இடர்களை எதிர்நோக்கும் என்றும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி பிங் சியோங் பூன் தெரிவித்தார்.
இதுபோன்ற திட்டங்களால் மற்ற நிறுவனங்களும் பசுமைத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் என்றும் உலகளாவிய வாய்ப்புகளைக் கைப்பற்றும் என்றும் திரு இங் தெரிவித்தார்.