பீஷான் ரோடு, பிரோடல் ரோடு சந்திப்பில் நேற்று காலையில் புதர்த் தீ ஏற்பட்டது. காலை 6.50 மணிக்கு அது பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அங்கு சென்ற தீயணைப்பாளர்கள் அங்கிருந்த சாலைத் தடுப்பில் உள்ள செடிகள் எரிந்துகொண்டிருந்ததைக் கண்டனர். தண்ணீர் பாய்ச்சி தீ அணைக்கப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. தீக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்