67 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் ஆறு முதியவர்கள் கொவிட்-19 தொடர்பிலான உடல்நலச் சிக்கல்களின் காரணமாக உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் மூவர் ஆடவர்கள் என்றும் மூவர் பெண்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டவர். மூவருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டது. எஞ்சிய இருவருக்கு தடுப்பூசி முற்றிலும் போடப்படவில்லை.
ஒருவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஏற்கெனவே உடல்நலச் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவற்றுடன் சிங்கப்பூரின் மொத்த மரண எண்ணிக்கை 142க்கு உயர்ந்துள்ளது. புதிதாக பதிவாகியுள்ள 3, 950 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 2,825 , சமூகத்தில் பதிவாகியுள்ளன. 756 சம்பவங்கள் ஊழியர் தங்கும் இடத்தில் பதிவாகியுள்ளன.