எஸ்பிஎஸ் பொதுப்பேருந்து ஓட்டுநர், கவனக்குறைவாக நடந்துகொண்டதால் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட நேர்ந்தது. அதற்காக அந்த ஓட்டுநருக்கு நேற்று $1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தப் பேருந்து ஓட்டுநர், தனது பேருந்துக்கும் அவ்வழியே சென்ற காருக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார். அதன் காரணமாக ஏற்படவிருந்த மோதலைத் தவிர்க்க, பேருந்தின் வேகத்தடை விசையை அழுத்தினார். அப்போது பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த 60 வயது பயணி ஒருவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காயங்களும் முதுகு எலும்பு முறிவும் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
பேருந்து ஓட்டுநர் 64 வயது ஓங் சுவான் ஹை, நேற்று முன்தினம் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரரான அவருக்கு இரண்டு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துக்கருகே சென்ற கார் ஓட்டுநரான 65 வயது டேங் டோ பியூ தமது பயணி குமாரி இந்திராணி கோவிந்தசாமிக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் 2019 மே மாதம் 30 ஆம் தேதி, மாலை 5,30 மணிவாக்கில் தெம்பனிஸ் அவென்யூ 7, புளோக் 370க்கு அருகே நிகழ்ந்தது.