சுகாதாரப் பணியாளர்களுக்கு முழு ஆதரவு: பிரதமர் லீ உறுதி

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போரில் ஆகச் சிர­ம­மான கால­கட்­டத்­தைச் சிங்­கப்­பூர் சந்­தித்­து­வரும் நிலையில், சுகா­தா­ரப் பரா­மரிப்பு ஊழி­யர்­கள் மிகுந்த நெருக்­க­டிக்­கு உள்­ளாக்­கப்­பட்டு இருப்­ப­தைப் பிர­த­மர் லீ சியன் லூங் ஒத்­துக்­கொண்­டார்.

நாட்டு மக்­க­ளி­டம் நேற்று நேரடி­யாக உரை­யாற்­றி­ய­போது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களுக்கு முழு ஆத­ரவு வழங்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

"உங்­க­ளை­யும் சுகா­தா­ரப் பரா­மரிப்பு அமைப்­பை­யும் பாது­காக்க எங்­க­ளால் ஆன எல்லா நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கி­றோம். எங்­க­ளால் உங்­க­ளைப் பாது­காக்க முடி­யா­வி­டில், உங்­க­ளா­லும் எங்­க­ளைப் பாது­காக்க இய­லாது. சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரின் சார்­பாக, உங்­கள் எல்­லார்க்­கும் நன்­றி­கூ­றிக் கொள்­கி­றேன். உங்­க­ளு­டன் நாங்­கள் இருக்­கி­றோம். எங்­க­ளது முழு ஆத­ர­வை­யும் உங்­க­ளுக்கு வழங்கு­வோம்," என்­றார் பிர­த­மர்.

கொரோனா பெருந்­தொற்­றைப் பாது­காப்­பா­கக் கடந்­து­வர என்ன விலை கொடுத்­தே­னும் நம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பை­யும் அதன் ஊழி­யர்­க­ளை­யும் பாது­காக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று அவர் சொன்­னார்.

கிரு­மிப் பர­வ­லின் முழுப் பளு­வை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் தாங்கி வரு­வ­தாக நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர்­ சந்­திப்­பின்­போது அமைச்­சர்­களும் புக­ழா­ரம் சூட்­டி­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!