தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) மூலம் நேற்று முன்தினம்வரை ஜெர்மனி, புருணை நாடுகளைச் சேர்ந்த 1,926 பேர் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
அவர்களில் ஜெர்மனியில் இருந்த வந்தோரில் இருவரை கொவிட்-19 தொற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
அவ்விருவரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் உள்ளூர்ச் சமூகத்துடன் அவர்கள் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
'விடிஎல்' திட்டத்தின்மூலம் நேற்று முன்தினம்வரை ஜெர்மனி, புருணை நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர 4,676 பேர்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு வந்திறங்கியபின் 3ஆம், 7ஆம் நாளில் அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.