கடைத்தொகுதிகளின் நடத்துநர்கள் வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாரகாலம் அதாவது அக்டோபர் 13ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை கொடுக்கப்படும்.
தடுப்பூசி போடாதவர்கள் அந்தக் கட்டடங்களில் உள்ள மருத்துவ சேவைகளையும் பிள்ளை பராமரிப்பு சேவையையும் பயன்படுத்துவதற்கான வழிமுறையையும் அந்நடத்துநர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
தடுப்பூசி போடாத சிலரும் கடைத்தொகுதிகளிலுள்ள அத்தியாவசிய பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி வர்த்தக, தொழில் அமைச்சும் என்டர்பிரைஸ் சிங்கப்பூரும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இது குறித்த மேல் விவரங்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்று இந்த அமைப்புகள் கூறுகின்றன. தடுப்பூசிகளைப் போடாதோரைப் பாதுகாப்பதும் சுகாதாரக் கட்டமைப்பின் பழுவைக் குறைப்பதும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் நோக்கம் என்று கிருமிப்பரவலுக்கு எதிரான அமைச்சர்நிலை பணிக்குழு நேற்று தெரிவித்தது.