கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 9) சிங்கப்பூர் கடற்பகுதியில் கடற்பசு (dugong) ஒன்று இறந்து கிடக்கக் காணப்பட்டது. அது காயத்தால் இறந்ததற்கான எந்த அறிகுறிகளும் அதன் உடலில் தென்படவில்லை என்று தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயினும், தேசிய பூங்காக் கழகம், தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியென் இயற்கை வரலாறு அரும்பொருளகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தது. அருகிவரும் விலங்கினமான கடல் பசுவை, சிங்கப்பூருக்குத் தெற்கிலுள்ள ‘புலாவ் ஹந்து’ தீவுக்கு அருகே முக்குளிப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.